• Home
  • >
  • Blog
  • >
  • Personal Loan
  • >
  • 30000 சம்பளத்தில் நான் எவ்வளவு தனிநபர் கடன் பெற முடியும்

30000 சம்பளத்தில் நான் எவ்வளவு தனிநபர் கடன் பெற முடியும்

தனிப்பட்ட கடன்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வாழ்க்கையின் நிச்சயமற்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் உதவுகின்றன. கல்வி, திருமணம், பயணம், சொத்து, மருத்துவமனை போன்றவற்றுடன் தொடர்புடைய நிதிகளை நிர்வகிக்க, தனிநபர் கடன் ஒரு வரப்பிரசாதமாக நிரூபணமாகும் வித்த்தில் பல நோக்கங்கள் உள்ளன. கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது ஒரு நீளமான, நேரத்தைச் செலவழிக்கும் செயல்முறை அல்ல, பயனாளர்-தோழமை உடனடி கடன் apps மற்றும் வலைதளங்களுக்கு நன்றி - இப்போது, ​​எனது வருமானம் அல்லது சம்பளத்தின் அடிப்படையில் எனக்கு கிடைக்கக்கூடிய கடன் தொகை என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா. இப்பொழுது  எனது சம்பளம் ரூ. 30,000 என்றால் நான் எவ்வளவு கடன் பெற முடியும்?

இதற்கான பதில் கடனளிப்பவருக்குக் கடனளிப்பவர் மாறுபடுவதுடன், நீங்கள் பொருந்தக்கூடிய தகுதி அளவுகோல்களும் அதற்கேற்ப மாறுபடும். வழக்கமாக ரூ. 30,000 சம்பளத்துடன், கடன் வாங்குபவர்கள் ரூ.15,000 முதல் 2 லட்சம் வரையான சிறிய பணக் கடன்களைப் பெறலாம். உடனடி பணத் தேவைகள் மற்றும் தெளிவான கடன்களைத் தீர்க்கவும் இதைப் பயன்படுத்தலாம். நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் ஒரு நல்ல சம்பளம் அதிக கடன் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

திருப்பிச் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள EMI தொகையைப் பயன்படுத்தி அதிகபட்ச கடன் தொகையை கணக்கிடலாம். EMI-களின் ரகம் மற்றும் கணக்கீடுகளைச் சரிபார்க்க, EMI கால்குலேட்டர் அல்லது தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி, துல்லியமான முடிவுகளை பெறலாம்.
To Avail Personal Loan
Apply Now

30000 சம்பளத்துடன் தனிநபர் கடனுக்கான தகுதி அளவுகோல்கள் என்ன?


தனிநபர் கடன் தகுதிக்கென வரும்போது ஒரு நபரின் மாத வருமானம் முக்கியமாது. தனிநபர் கடன்களுக்கென வெவ்வேறு கடன் வழங்குநர்கள் வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டுள்ளனர். ரூ. 30,000 சம்பளத்துடன் தனிநபர் கடன் விண்ணப்பத்தில் பின்வரும் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யவும்:
 
  • இந்திய குடியுரிமை சான்று
  • வருமானச் சான்றுகளாக ஆறு மாத வங்கி அறிக்கை மற்றும் சம்பளச் சீட்டு
  • விண்ணப்பதாரரின் வயது தகுதி அளவுகோல் 21-58 ஆண்டுகள் வரை.
  • நீங்கள் சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும்
  • நீங்கள் தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும்
  • கடனளிப்பவர் நிர்ணயித்த அளவுகோல்களை உங்கள் கடன் வரலாறு பூர்த்தி செய்ய வேண்டும். வெவ்வேறு கடன் வழங்குநர்கள் தங்கள் தரநிலைகளின்படி வெவ்வேறு அளவுகளை அமைப்பதால் கிரெடிட் ஸ்கோர் மாறுபடலாம்
 

ரூ. 30,000 அல்லது அதற்கும் அதிமான சம்பளத்துடன் கடன் ஒப்புதலுக்கான தகுதிநிலை வரம்புடன் கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்களின் தொகுப்பு உள்ளது:

 
  • தரநிலை KYC ஆவணங்கள்

    ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், PAN அட்டை, பாஸ்போர்ட்
  • வருமான ஆவணங்கள்

    சம்பளம் பெறும் தனி நபர்களுக்கென சமீபத்திய சம்பளச் சீட்டுகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கென வங்கி அறிக்கை

ஹீரோஃபின்கார்ப் என்பது ஹீரோஃபின்கார்ப் ஆல் இயக்கப்படும் உடனடி தனிநபர் கடன் app ஆகும். இது குறிப்பாக ரூ.50,000-1,50,000 இடையே எளிதான உடனடி கடனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த ஒருசில நிமிடங்களில் தொகை எளிதாகக் கிடைத்து விடும். உடனடியாக 1.5 லட்சம் கடன் தொகையைப் பெறுவதற்கான நடைமுறையானது காகிதமில்லா ஆவணங்கள் மற்றும் நிகழ்நேர சரிபார்ப்பை உள்ளடக்கியது. ஒருமுறை சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், 48 மணி நேரத்திற்குள் கடன் விநியோகம் செய்யப்படுகிறது.

சம்பள அடுக்கை எதுவாக இருந்தாலும், ஹீரோஃபின்கார்ப் app கடன் தேடுபவர்களுக்கு விடுமுறைக் கடன், கல்விக் கடன், நுகர்வோர் கடன், வீட்டை புதுப்பித்தல் கடன், மருத்துவக் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்களுக்கு விண்ணப்பிக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. இது உங்களுக்கு விருப்பமான கடன் வகையை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு விருப்பத்தேர்வை உங்களுக்கு வழங்குகிறது. மேலும் குறைந்தபட்ச மாத வருமானம் ரூ. 15,000 உள்ள தனிநபர்கள் ஹீரோஃபின்கார்ப் app-ல் தனிநபர் கடனுக்கும் விண்ணப்பிக்கலாம்.

To Avail Personal Loan
Apply Now