Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow
  • Home
  • Blog
  • Personal Loan
  • கடன் வாங்கியவர் இறந்து விட்டால் ஒரு தனி நபர் கடன் என்னாகும்?
61e11a26e9ffa_8.8.webp
வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதால் பலர் தங்கள் நிதி நிலைமைகளை முன் கூட்டியே திட்டமிடுகிறார்கள். விபத்து, காயங்கள் மற்றும் கடன் வாங்கியவரின் இறப்பு போன்ற எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள்அவர் குடும்பத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால் கடன் வாங்கியவர் இறக்க நேரிட்டால், கடன் என்ன ஆகும்? திரும்ப செலுத்தும் பொறுப்பை யார் எடுத்துக்கொள்வார்கள்? கடன் வாங்கியவர் இல்லாத நிலைமையில் நிதி நிறுவனங்கள் தங்கள் EMIகளை எவ்வாறு திரும்பப்பெறுவார்கள்? ஒரு தனிநபர் கடன் வாங்கும் போது இவையனைத்தும் பொதுவாக எழும் கேள்விகள் ஆனால் கடன் வாங்கியவர் உயிருடன் இல்லாத போது திரும்ப செலுத்துதல் கடினமாகிறது.

கடன் காலத்தின் நடுவில் கடன் வாங்கியவரின் இறப்பு நிகழுமானால். என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி வெவ்வேறு நிதி நிறுவனங்கள் தனி நபர் கடன் ஆவணத்தில் தங்கள் சொந்த உட்பிரிவுகளை கொண்டிருக்கின்றன. ஒரு வேளை இறந்த நபர் அவர்/அவள் பேரில் ஆயுள் காப்பீடு பெற்றிருந்தால், தனி நபர் கடனை அந்த கடனை காப்பீட்டு கழகம் செலுத்திவிடும் மற்றும் கடன் வாங்கியவரின் குடும்ப உறுப்பினர் எவரின் மீதும் எந்த சுமையும் இருக்காது.


கடன் வழங்குபவர்கள் கடன் வாங்கியவரின் இறப்புக்கு பின் தனிக் கடனை எவ்வாறு திரும்ப பெறுகிறார்கள்?


இறப்புக்கான காரணம் எதுவானாலும், இறந்த கடனாளியின் குடும்பம் அல்லது ஒரு இணை விண்ணப்பதாரரே தனிநபர் கடனை திரும்பப்பெற அணுக வேண்டிய சரியான ஆதாரங்கள். தனி நபர் கடனை திரும்ப செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட திரும்ப செலுத்தும் காலம் வழங்கப்படுகிறது. கடன் சட்டபூர்வ வாரிசுகளால் திரும்ப செலுத்தப்படவில்லையென்றால், கடனாளியின் சொத்து அல்லது வாகனத்தை பறிமுதல் செய்து, மற்றும் அதன் ஏலத்திலிருந்து கடனை திரும்ப பெற கடன் கொடுத்தவருக்கு அதிகாரம் உண்டு.
To Avail Personal Loan
Apply Now


தனி நபர் கடன் கடன் வாங்கியவரின் பேரில் இருந்தால் என்ன நடக்கும்?


இறந்தவருக்கு சட்டபூர்வ வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மற்றும் தனி நபர் கடன் கடனாளியின் பெயரில் மட்டுமே எடுக்கப் பட்டிருந்தால், அப்போது கடனை தீர்க்க கடன் நிர்வாகி வருவார். அவர் தன்னுடைய பணத்தை கொடுப்பார் என்று அர்த்தமில்லை. அதற்குப் பதிலாக, கடனாளியின் சொத்துகள் கடனை செலுத்த உபயோகப்படுத்தப்படும்.


கடனாளியின் இறப்புக்கு பின் தனி நபர் கடனை திரும்ப செலுத்தும் முறை என்ன?

 
  • கடன் வழங்கியவருக்கு/ கொடுத்தவருக்கு கடனாளியின் இறப்பை குறித்து அறிவியுங்கள், இல்லாவிட்டால், EMIகள் எப்போதும் போல சாதாரணமாகவே செலுத்தப்படும் என கொள்ளப்படும்.
  • கடன் வழங்கியவரிடம் திருப்பி செலுத்த வேண்டிய முழு மற்றும் இறுதி நிலுவைத் தொகையைக் கேட்டறியவும்
  • கடனாளி அவர்/அவள் பெயரில் தனிக்கடன் காப்பீடோ அல்லது ஆயுள் காப்பீடோ பெற்றிருக்கிறாரா என்று சோதிக்கவும். கடனை செலுத்த அதை உபயோகிக்க முடியும்
  • காப்பீடு ஏதும் இல்லையெனில், கடன் நிர்வாகி கடனாளியின் குடும்பத்தினரிடம் அவர்களது உடைமைகள், ஏதேனும் சொத்து அல்லது அவர்கள் உடைமையான நிலம் போன்றவற்றை குறித்து சோதிக்க வேண்டும்
  • கடன்களை செலுத்துமளவிற்கு சொத்துகள் இல்லாத பட்சத்திலும், தனி நபர் கடன் கடனாளியின் பெயரில் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே, மீதமுள்ளவை தள்ளுபடி செய்யப்படும்

To Avail Personal Loan
Apply Now
Did You Know

Disbursement

The act of paying out money for any kind of transaction is known as disbursement. From a lending perspective this usual implies the transfer of the loan amount to the borrower. It may cover paying to operate a business, dividend payments, cash outflow etc. So if disbursements are more than revenues, then cash flow of an entity is negative, and may indicate possible insolvency.

Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!