குறுகிய கடன் காலம்
ஒரு குறுகிய காலக் கடன் பொதுவாக 2 ஆண்டுகள் வரை இருக்கும் மற்றும் கடன் வாங்கியவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் சுமையைக் கொடுத்து பல ஆண்டுகள் நீடிக்காது.
I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.
குறுகிய கால கடன் என்பது அவசர கடன் தேவைகளை ஆதரிக்கும் சரியான வகை நிதியாகும். புதிய ஸ்மார்ட் கேட்ஜெட்டை வாங்குவது முதல் இருப்பு கடன்களை செலுத்துவது வரை, ஒரு நிலையான நிதி நிலையை பராமரிக்க குறுகிய கால கடன் உதவும். மற்ற கடன்களுடன் ஒப்பிடுகையில், ஒரு குறுகிய கால தனிநபர் கடன் பொதுவாக ஒரு ஆண்டுக்கு குறுகிய காலத்திற்கு எடுக்கப்படுகிறது. திடீர் பணத் தேவைகள் அல்லது நிதி பற்றாக்குறை ஆகியவை கடன் வாங்குபவர்கள் குறுகிய கால கடன்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.
கடன் குறுகிய காலத்திற்கு எடுக்கப்படுவதால், இஎம்ஐ மிகவும் மலிவாக இருப்பதுடன், திருப்பிச் செலுத்துவதும் எளிது. இது நீண்ட கால கடனை விட குறுகிய கால கடனை மிகவும் சாத்தியமானதாக ஆக்குகிறது. பல்வேறு நிதி நிறுவனங்களின் கடன் வலைதளங்கள், உடனடி கடன் apps, கஸ்டமர் கேர் உதவி அல்லது தனிப்பட்ட முறையில் கிளையைப் பார்வையிடுவதின் மூலம் நீங்கள் குறுகிய கால கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஹீரோஃபின்கார்ப் என்பது ஹீரோ ஃபின் கார்ப் இயக்கும் உடனடி தனிநபர் கடன் app ஆகும். இது குறிப்பாக ரூ. 50,000 முதல் 1,50,000 வரை உடனடி குறுகிய கால கடன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த சில நிமிடங்களில் தொகை எளிதாகக் கிடைக்கும். உடனடி குறுகிய கால நிதியைப் பெறுவதற்கான நடைமுறையானது காகிதமற்ற ஆவணங்கள் மற்றும் நிகழ்நேர சரிபார்ப்பை உள்ளடக்கியது. சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், 24 மணி நேரத்திற்குள் கடன் விநியோகம் செய்யப்படுகிறது.
ஹீரோஃபின்கார்ப் தனிநபர் கடன் app ஒரு முழுமையான டிஜிட்டல்மயமாக்கப்பட்ட உடனடி கடன் தளமாகும். உங்கள் கடன் கணக்கை நீங்கள் ஆன்லைனில் நிர்வகிக்கலாம் மற்றும் வட்டி விகிதம், EMI -கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் போன்ற முக்கியமான விவரங்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருக்கலாம்.. எனவே, ஹீரோஃபின்கார்ப் மூலம் ஆபத்து இல்லாத குறுகிய காலக் கடனைப் பெற்று, 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நெகிழ்வான காலவரையில் உங்கள் வசதிக்கேற்ப கடனை திருப்பிச் செலுத்தலாம்.
ஹீரோஃபின்கார்ப் app-ல் உள்ளமைக்கப்பட்ட EMI கால்குலேட்டரை பயன்படுத்தி, கடன் தொகை, வட்டி மற்றும் தவணைக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் குறுகிய கால கடன்களின் மீது விரும்பிய EMI-ஐப் பெறுங்கள்.
ஹீரோஃபின்கார்ப் உடனடி தனிநபர் கடன் என்பது ஆன்லைனில் கிடைக்கும் குறுகிய கால கடனாகும், கடன் வாங்குபவர்கள் எந்த அவசர தேவைக்காகவும் இதை பயன்படுத்தலாம். இதை ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இன்றி, வீட்டு வாடகை செலுத்துதல், திட்டமிடாத பயணத்தை முன்பதிவு செய்தல், கல்விக் கட்டணம் செலுத்துதல், பழுதுபார்ப்புகளை கையாளுதல் போன்ற பல்வேறு அவசர நிதி தேவைகளுக்கெனவும் நெகிழ்வாக பயன்படுத்தப்படலாம். வணிக ரீதியாகவும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் அல்லது ஸ்டார்ட் –அப்ஸ்-கெனவும் குறுகிய கால கடன் மதிப்பு வாய்ந்தது.
குறுகிய கால கடனைப் பெறுவது நிதி நெருக்கடியைச் சமாளிக்க எளிதான வழியாகும். கடன் வாங்கிய தொகை பெரியதாக இல்லாததால், கடன் வாங்குபவர்களுக்கு ஆபத்து இல்லை மற்றும் வாங்கிய கடனை படிப்படியாக EMI களில் திருப்பிச் செலுத்த முடியும். உடனடி கடன் app.-கள், நீங்கள் சவுகரியமாக இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் குறுகிய கால கடன்களைப் பெறுவதை எளிதாக்கியுள்ளன. வீடு, அலுவலகம் அல்லது வேறு எங்கும் இருந்தாலும், தனிநபர் கடன் app.-ஐ பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் குறுகிய கால கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்கலாம். ஹீரோஃபின்கார்ப் போன்ற உடனடி கடன் app–கள் மூலம் குறுகிய கால கடன்களைப் பெறுவதின் நன்மைகள் மற்றும் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்:
தொந்தரவு இல்லாத தகுதி அளவுகோல்கள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களின் தேவை, ஆன்லைனில் குறுகிய கால கடன்களின் ஆதாயமாகும். குறைவான சம்பிரதாயங்கள் காரணமாக, குறுகிய கால கடன்கள் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கின்றன. குறுகிய கால கடன்களுக்கான உடனடி ஒப்புதலுக்குத் தேவையான தகுதி அளவுகோல்கள் மற்றும் கட்டாய ஆவணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்:
ரூ. 50,000 அல்லது ரூ.1,50,000 கடன் வாங்குபவர்கள் குறுகிய கால கடனுக்கு விண்ணப்பிக்குமுன், தகுதி வரம்புகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் மீது மோசடி வழக்குகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்படுகிறது.
சம்பளம் பெறுபவர்களுக்கான குறைந்தபட்ச மாத வருமானம் : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 சம்பாதிக்க வேண்டும்
சுயதொழில் செய்பவர்களுக்கான குறைந்தபட்ச மாத வருமானம்: குறைந்தபட்ச வருமானம் மாதம் ரூ.15,000 ஆக இருக்க வேண்டும் மற்றும் கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை கட்டாயம் தேவை
வருமான சான்று: சம்பளம் அல்லது தனிப்பட்ட கணக்கின் 6 மாத வங்கி அறிக்கை
குறுகிய கால கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டைதான் முதல் ஆவணமாக இருக்கும்
ஆன்லைன் தொந்தரவு இல்லாத ஆவணங்கள், பிசிகல் கடன் விண்ணப்பத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. 1.5 லட்சம் வரையான உடனடி குறுகிய கால கடனுக்கென, பின்வரும் கட்டாய ஆவணங்கள் அல்லது விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில், உங்கள் Pan கார்டு/ஓட்டுநர் உரிமத்தை வழங்கலாம்
மற்ற முக்கியமான ஆவணங்களில் 6 மாத வங்கிக் கணக்கு அறிக்கை உள்ளிட்ட உங்களின் தொழில்முறை மற்றும் நிதி விவரங்கள் அடங்கும்
நிதி நிறுவனம் பரிந்துரைத்தபடி உங்கள் கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கிகளில் இருக்க வேண்டும்
வயது வரம்பு: கடன் விண்ணப்பதாரர் 21-58 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
குறுகிய கால அடிப்படையில் உடனடி கடனுக்கான பல அம்சங்களுடன் ஹீரோஃபின்கார்ப் கடன் பயன்பாடு உள்ளது. கடன் விண்ணப்ப செயல்முறை மிகவும் எளிதானது, கீழே உள்ள செயல்முறை கட்டங்களை பின்பற்றவும்:
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து, ஹீரோஃபின்கார்ப் இன்ஸ்டன்ட் லோன் app-ஐ நிறுவவும்
அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்யவும் - மொபைல் எண் மற்றும், மின்னஞ்சல் முகவரி
கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி விரும்பிய EMIஐ அமைக்கவும்
பாதுகாப்புக் குறியீட்டைப் பயன்படுத்தி KYC விவரங்களின் காகிதமில்லா சரிபார்ப்பு
நெட் பேங்கிங் மூலம் வங்கி கணக்கு சரிபார்ப்பு; சான்றுகள் ஒருபோதும் சேமித்து வைக்கப்படுவதில்லை
உடனடி கடன் சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்